அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Monday 30 May 2011

எறும்பு





கட்டெறும்பு- (சிறுவர் பாடல்)


கட்டெறும்பு ஊருது
காலில் கடிக்கப் பார்க்குது
இனிப்புத் துண்டு எதனையோ 
இழுத்துக் கொண்டு போகுது


வரிசை வரிசையாகவே
வழியில் நடந்து போகுது
எறும்பு ஊர்ந்த கற்களும் 
எளிதில் குழியாகுது
                            (கட்டெறும்பு)
இனியும் தூங்கும் மனிதனும்
சொத்து சேர்த்து வைக்கணும்
எறும்பு போல அனைவரும்
எளிதாய் வாழ்வைக் கழிக்கலாம்  
(கட்டெறும்பு)


ஆவூரான்.


0 comments:

Post a Comment