அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Sunday 26 June 2011

 வெண்ணிலாவைச் சுற்றி
விளையாடும் விண்மீன்களே-நீங்கள்
வருவீர்களா நிலத்தில்
விளையாடவே        ( வெண்ணி)

வீட்டில் யாரும் இல்லை
வீண் தொல்லை ஏதும் இல்லை
சேர்ந்து விளையாட இங்கு-வேறு
செல்லம் கூட இல்லை        (வெண்ணி)

பாவாடை கட்டிக் கொண்டு
பாட்டுப் பாடி ஆடலாம்
பால் சோறும் உண்ணலாம்

பாயாசமும் கட்டிக் கொண்டு
பால்நிலாவுக்கு கொடுக்கலாம்-நான்
பாடும் தமிழைக் கேட்டு-நீங்கள்
விண்ணில் எங்கும் தூவலாம்   (வெண்ணி)
                                               கவிஞர் ஆவூரான்.    

0 comments:

Post a Comment