அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Thursday 16 April 2020

தூக்கனாங் குருவி கூடு

தூக்கனாங் குருவிக் கூடு

தூக்கனாங்குருவிக் கூடு
தொங்குது மரத்தில் பாரு
யாரிடம் கற்றாரு-இக்
கட்டிடக் கலையை குருவியாரு

விஞ்ஞானமும் மெய் சிலிர்க்கும்
விந்தையான வீடு-எந்த
மெஞ்ஞானமும் அறியாத
மென்மையான கூடு

உள்ளுக்குள் ஒரு அறை
உறங்க சின்ன மெத்தை
வாசல் ஒரு குழல் போல
வடிவாகத் தானிருக்கும்-கூடு
காற்றடிக்கும் கடும் புயலடிக்கும்
மழை வந்து சோவென்று தானடிக்கும்
கூடாடும் தொட்டிலாக -குருவி
சொகுசாகத் தான் தூங்கும்

தூக்கனாங் குருவிக் கூடு
தொங்குது மரத்தில் பாரு

 

0 comments:

Post a Comment