அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Saturday 25 April 2020

வெண்ணிலவு


வெண்ணிலவு வானத்தில்
பாலொழியை    தூவும்
வெண்மணலில் என் பிள்ளை
“அ”எழுதிப் பழகும்

கண்ணயர்ந்து போகையிலும்
காற்று வந்து களையும்
கவி எழுதிப் பாடச் சொல்லி
தமிழ் உருகி வழியும்

மடி தூங்கும் என் பிள்ளை
கதை கேட்டு அழு(கு)ம்
மண்ணாட தமிழ் மன்னர்
கதை கேட்டுத் தூங்கும்

பாட்டி வடை  சுட்ட கதை
சொல்ல மனம் இல்லை
பறவைகளும் மிருகங்களும்
ஏய்த்து வாழ்வதில்லை

                                               ஆவூரான்

0 comments:

Post a Comment