அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Friday 17 April 2020

மாமரமே மாமரமே

அந்த மாமரம் தான் எங்கள்
மண்ணுக்கு அழகு-இந்தக்
குயில் வாழ தந்தது உணவு

கூடு கட்டி வாழ்வதற்கோ
குயிலுக்குத் தான் தெரியாது
கூடு இல்லாப் போதினிலும்
வீடு தந்த மாமரமே

வளர்த்த காகம் துரத்திக் கொத்த
வழி தவறிப் போன என்னை
வாழ வழிகாட்டி
வளர்த்து விட்ட மாமரமே

மாவிருந்து கூவியதால்
மாங்குயிலே என்றழைத்தார்
பேர் தந்த மாமரமே
பேய்கள் உனை எரித்தாரோ

கூடிழந்தேன் கொத்தும்
காகத்தின் கொடுமை கண்டேன்
காலம் ஒன்று வாராதோ
கூடு கட்டி நான் வாழ
முளையாதோ மாமரமே

                                                   ஆவூரான்




0 comments:

Post a Comment