அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்னயாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் – பாரதி-

Thursday 5 May 2011

தாயெனும் தெய்வத்தை




தூழியில் ஆடும் வேளையிலே-அன்னை
தூங்க வைப்பாள் அவள் பாட்டினிலே
ஆழியில் எடுத்த முத்தாய்-என்னை
அள்ளி அணைப்பாள் தோழினிலே     (தூழியில்)

வைரத்தை முத்தை ஒப்பிடுவாள்
வாழ்வுக்கு நல்லதை செப்பிடுவாள்
கல்வி செல்வத்தை தேடிடவே
கண்ணுறங்காமலே காத்திடுவாள்       (தூழியில்)

நிலவினை காட்டி சோறினை ஊட்டி
நிலத்தினில் விரலால் அ னாவை தீட்டி
அழகழகாய் ஆடைகள் சூட்டி
ஆபரணம் எல்லாம் உடலினில் மாட்டி  (தூழியில்)

அன்னைக்கு ஈடாய் யாருமில்லை
அவளைக் கும்பிட இங்கு கோயிலில்லை
ஆராரோ தேவாரம் பாடிடுவோம் அந்த
தெய்வத்தை இந் நாளில் போற்றிடுவோம்.       (தூழியில்)

அன்னையர் தினத்துக்காக........
                                         
                                                

0 comments:

Post a Comment